செய்திகள்
கே.கே.நகரில் சினிமா டப்பிங் கலைஞர் வீட்டில் ஏ.சி. தீப்பிடித்தது
சென்னை கே.கே.நகரில் சினிமா டப்பிங் கலைஞர் வீட்டில் ஏ.சி.யில் தீப்பிடித்த தீயால் படுக்கையறையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.
போரூர்:
சென்னை, மேற்கு கே.கே.நகர் வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். சினிமா டப்பிங் கலைஞர். இவரது மகன் சரவணன். இன்று அதிகாலை சரவணன் படுக்கை அறையில் உள்ள ஏ.சி.எந்திர மெஷினில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பி சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது.
இதைக் கண்ட ராஜேந்திரன் உடனடியாக மகன் சரவணனுடன் வீட்டில் இருந்து வெளியேறினார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வீட்டில் தீப்பிடித்ததும் உடனடியாக வெளியேறியதால் தந்தையும், மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். படுக்கையறையில் இருந்த கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது.
சென்னை, மேற்கு கே.கே.நகர் வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். சினிமா டப்பிங் கலைஞர். இவரது மகன் சரவணன். இன்று அதிகாலை சரவணன் படுக்கை அறையில் உள்ள ஏ.சி.எந்திர மெஷினில் இருந்து திடீரென கரும்புகை கிளம்பி சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது.
இதைக் கண்ட ராஜேந்திரன் உடனடியாக மகன் சரவணனுடன் வீட்டில் இருந்து வெளியேறினார். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். வீட்டில் தீப்பிடித்ததும் உடனடியாக வெளியேறியதால் தந்தையும், மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். படுக்கையறையில் இருந்த கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது.