செய்திகள்
திருவண்ணாமலையில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
திருவண்ணாமலையில் கல்லூரி பேராசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை வேங்கிக்கால் தென்றல் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது28), இவரது மனைவி நிவேதிதா (25). இவர்கள் இருவரும் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நிவேதிதாவின் உறவினர் ஒருவர் கடந்த வாரம் சென்னையில் இறந்து விட்டார். அவரது காரிய நிகழ்ச்சிக்காக கணவன், மனைவி இருவரும் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். இதனை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகைகள் மற்றும் 1½ கிலோ வெள்ளி பொருட்களை அள்ளி சென்று விட்டனர்.
நேற்று மதியம் வீடு திரும்பிய பிரபாகரன், நிவேதிதா ஆகியோர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், டவுன் டி.எஸ்.பி.அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் தென்றல் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது28), இவரது மனைவி நிவேதிதா (25). இவர்கள் இருவரும் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் நிவேதிதாவின் உறவினர் ஒருவர் கடந்த வாரம் சென்னையில் இறந்து விட்டார். அவரது காரிய நிகழ்ச்சிக்காக கணவன், மனைவி இருவரும் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். இதனை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகைகள் மற்றும் 1½ கிலோ வெள்ளி பொருட்களை அள்ளி சென்று விட்டனர்.
நேற்று மதியம் வீடு திரும்பிய பிரபாகரன், நிவேதிதா ஆகியோர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், டவுன் டி.எஸ்.பி.அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.