செய்திகள்
விபத்து

கோவையில் விபத்து- தனியார் நிறுவன ஊழியர் பலி

Published On 2020-03-03 09:29 GMT   |   Update On 2020-03-03 09:29 GMT
கோவையில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் போஸ்ட் கம்பத்தில் மோதி வாலிபர் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(21). தனியார் நிறுவன ஊழியர். இவர் இன்று அதிகாலை வீட்டில் இருந்து மளிகை பொருட்கள் வாங்குவதற்காக எஸ்.எஸ்.குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள வளைவில் திரும்பிய போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த போஸ்ட் கம்பத்தில் பலமாக மோதியது.

இதில் விஜயகுமார் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News