செய்திகள்
கோப்பு படம்

வல்லத்தில் வாலிபர்களால் விபத்தில் சிக்கிய கணவர்-மனைவி ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2020-02-28 13:54 GMT   |   Update On 2020-02-28 13:54 GMT
வல்லத்தில் 4 வாலிபர்களால் விபத்தில் சிக்கிய கணவன் மனைவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள மருங்குளம் அருகே உள்ள கோபால் நகரை சேர்ந்தவர் விவசாயி ரமேஷ்(வயது 45). இவருடைய மனைவி அமுதா (40). இவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை, சோளம் ஆகியவைகளை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று ரமேஷ் மனைவி அமுதாவுடன் மோட்டார் சைக்கிளில் தோட்டத்திற்கு சென்றார். மருங்குளம்-கறம்பக்குடி சாலையில் சென்றபோது அதே சாலையில் வேகமாக நான்கு நபர்கள் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ரமேஷ், அமுதா ஆகியோர் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அமுதா மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News