செய்திகள்
மாயம்

களக்காடு அருகே இளம்பெண் மாயம்- போலீசார் விசாரணை

Published On 2020-02-27 11:51 GMT   |   Update On 2020-02-27 11:51 GMT
களக்காடு அருகே இளம்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:

களக்காடு அருகே உள்ள மேலவடகரை, நடுத்தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 46). இவரது மனைவி பேச்சியம்மாள் (29). இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். சங்கர் கேரளாவில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார். எனவே பேச்சியம்மாள் தனது மகள், மகன்கள், மாமியாருடன் மேலவடகரையில் வசித்து வருகிறார். மேலும் பேச்சியம்மாள் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 24-ந்தேதி மதியம் 2 மணிக்கு பேச்சியம்மாள், மாமியாரிடம் களக்காட்டில் உள்ள பீடி கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதுபற்றி அவர் தனது மகன் சங்கருக்கு தகவல் கொடுத்தார். அவர் ஊருக்கு வந்து உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் பேச்சியம்மாளை தேடினார். எனினும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பேச்சியம்மாளை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News