செய்திகள்
கைது

நெல்லை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை- பாதிரியார் கைது

Published On 2020-02-27 10:39 GMT   |   Update On 2020-02-27 10:39 GMT
நெல்லை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராதாபுரம்:

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிபாறையை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 52). மதபோதகரான இவர் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள வடக்கன்குளம் அன்புநகரில் கடந்த 20 வருடமாக ஜெபக்கூடம் நடத்தி வருகிறார்.

இந்த ஜெபக்கூடத்திற்கு அதேபகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வழக்கமாக ஜெபம் செய்ய வருவார்கள். அந்த தம்பதியினரின் 8 வயது பெண் குழந்தையும் தினமும் அங்கு வந்து செல்லும்.

இந்நிலையில் அந்த சிறுமிக்கு பாதிரியார் செல்வராஜ் கடந்த சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதேபோல் கடந்த 23-ந்தேதியும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் செல்வராஜை போக்சோ சட்டத்தில் இன்று கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News