செய்திகள்
நெல்லித்தோப்பில் குடிக்க பணம் தர மறுத்ததால் பெயிண்டர் தற்கொலை
புதுவை நெல்லித்தோப்பில் மது குடிக்க பணம் தர தாய் மறுத்ததால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை நெல்லித்தோப்பு ஜாபர்பாய் தோட்டம் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அருள்தாமஸ் (வயது33). பெயிண்டர். இவரது மனைவி ரீனா. இவர்களுக்கு டெல்பின் (13) என்ற மகளும், நெல்சன் (11) என்ற மகனும் உள்ளனர். அருள்தாமசுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கிடையே சம்பவத்தன்று குடும்ப தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் ரீனா தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலைக்கு சென்று விட்டார். அருள்தாமஸ் மதுகுடிப்பதற்காக அவரது தாய் செலினிடம் பணம் கேட்டுள்ளார். அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அருள்தாமஸ் திடீரென வீட்டின் உள்ளே சென்று அவரது மனைவியின் சேலையால் இரும்பு கம்பியில் தூக்குபோட்டு தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் செலின் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அருள்தாமசின் தம்பி ஆரோக்கியசாமி மற்றும் அங்கிருந்தவர்கள் உதவியுடன் அருள்தாமசை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து ஆரோக்கியசாமி உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுவை நெல்லித்தோப்பு ஜாபர்பாய் தோட்டம் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அருள்தாமஸ் (வயது33). பெயிண்டர். இவரது மனைவி ரீனா. இவர்களுக்கு டெல்பின் (13) என்ற மகளும், நெல்சன் (11) என்ற மகனும் உள்ளனர். அருள்தாமசுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இருவருக்கிடையே சம்பவத்தன்று குடும்ப தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் ரீனா தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வேலைக்கு சென்று விட்டார். அருள்தாமஸ் மதுகுடிப்பதற்காக அவரது தாய் செலினிடம் பணம் கேட்டுள்ளார். அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அருள்தாமஸ் திடீரென வீட்டின் உள்ளே சென்று அவரது மனைவியின் சேலையால் இரும்பு கம்பியில் தூக்குபோட்டு தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் செலின் சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அருள்தாமசின் தம்பி ஆரோக்கியசாமி மற்றும் அங்கிருந்தவர்கள் உதவியுடன் அருள்தாமசை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து ஆரோக்கியசாமி உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.