செய்திகள்
தேனி அருகே குடிபோதையில் மகளை கற்பழிக்க முயன்ற தந்தை
தேனி அருகே குடிபோதையில் மகளை கற்பழிக்க முயன்ற தந்தையை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
தேனி:
தேனி அல்லிநகரம் மச்சால்வடக்கு தெருவை சேர்ந்தவர் மகேஷ் (வயது41). பழ வியாபாரம் செய்து வருகிறார். குடி பழக்கத்துக்கு அடிமையானவர். இவர் தினமும் குடித்து விட்டு தனது வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் அவரது மனைவிக்கும் மகேசுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த மகேஷ் தனது 15 வயது மகளை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனை பார்த்த அவரது மனைவி கீதா கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்து தனது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து கீதா அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
தேனி அல்லிநகரம் மச்சால்வடக்கு தெருவை சேர்ந்தவர் மகேஷ் (வயது41). பழ வியாபாரம் செய்து வருகிறார். குடி பழக்கத்துக்கு அடிமையானவர். இவர் தினமும் குடித்து விட்டு தனது வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் அவரது மனைவிக்கும் மகேசுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த மகேஷ் தனது 15 வயது மகளை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனை பார்த்த அவரது மனைவி கீதா கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்து தனது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து கீதா அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.