செய்திகள்
கோப்பு படம்

அபிராமபுரம் கூவம் பகுதியில் 3 மணல் லாரிகள் சிக்கியது

Published On 2020-02-25 08:54 GMT   |   Update On 2020-02-25 08:54 GMT
சென்னை, கிரீன்வேஸ் சாலையை ஒட்டியுள்ள கூவம் கரையோரம் பகுதிகளில் மணல் அள்ளி 3 லாரிகளை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

சென்னை, கிரீன்வேஸ் சாலையை ஒட்டியுள்ள கூவம் கரையோரம் பகுதிகளில் லாரியில் மணல் அள்ளி கடத்தப்படுவதாக அபிராமபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மணலுடன் நின்ற 3 லாரிகளை பிடித்தனர்.

லாரியில் ‘பொதுப்பணித்துறை’ என்று ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இங்கு மணல் அள்ள அனுமதி பெறப்பட்டதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரி உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
Tags:    

Similar News