செய்திகள்
வில்லியனூர் அருகே மனைவி கோபித்து கொண்டு சென்றதால் டிரைவர் தற்கொலை
வில்லியனூர் அருகே மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே ஆரியப்பாளையத்தை சேர்ந்தவர் கமல்ராஜ் (வயது30). இவர் குப்பைவாரும் வாகன டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு புவனேஷ்வரி என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
இதற்கிடையே மதுகுடிக்கும் பழக்கம் உள்ள கமல்ராஜ் கடந்த 10 நாட்களாக விடுப்பு எடுத்து கொண்டு மது குடித்து வந்தார்.
தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் கமல்ராஜ் மதுகுடித்து வந்ததால் கடந்த 1 வருடத்துக்கு முன்பு கணவனுடன் கோபித்து கொண்டு புவனேஸ்வரி குழந்தையுடன் சந்திக்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை கமல்ராஜ் தனது மனைவிக்கு போன் செய்து குழந்தையுடன் வீட்டுக்கு வராவிட்டால் தற்கொலை செய்து கொள்ள போவதாக புவனேஸ்வரியிடம் கூறினார். ஆனால் குடிபோதையில் கணவர் மிரட்டுவதாக எண்ணி புவனேஸ்வரி இதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
போன் செய்தும் மனைவி வீட்டுக்கு வராததால் விரக்தி அடைந்த கமல்ராஜ் வீட்டின் கூரையில் வேட்டியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வில்லியனூர் அருகே ஆரியப்பாளையத்தை சேர்ந்தவர் கமல்ராஜ் (வயது30). இவர் குப்பைவாரும் வாகன டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு புவனேஷ்வரி என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
இதற்கிடையே மதுகுடிக்கும் பழக்கம் உள்ள கமல்ராஜ் கடந்த 10 நாட்களாக விடுப்பு எடுத்து கொண்டு மது குடித்து வந்தார்.
தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் கமல்ராஜ் மதுகுடித்து வந்ததால் கடந்த 1 வருடத்துக்கு முன்பு கணவனுடன் கோபித்து கொண்டு புவனேஸ்வரி குழந்தையுடன் சந்திக்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை கமல்ராஜ் தனது மனைவிக்கு போன் செய்து குழந்தையுடன் வீட்டுக்கு வராவிட்டால் தற்கொலை செய்து கொள்ள போவதாக புவனேஸ்வரியிடம் கூறினார். ஆனால் குடிபோதையில் கணவர் மிரட்டுவதாக எண்ணி புவனேஸ்வரி இதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
போன் செய்தும் மனைவி வீட்டுக்கு வராததால் விரக்தி அடைந்த கமல்ராஜ் வீட்டின் கூரையில் வேட்டியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.