செய்திகள்
ரெட்டியார்பாளையத்தில் நகை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
ரெட்டியார் பாளையத்தில் நகை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
விழுப்புரம் சீத்தாராம் வீதியை சேர்ந்தவர் கருணாகரன். (வயது 69). இவர் விழுப்புரத்தில் நகை செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கருணாகரனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கருணாகரன் தனது மனைவி மாரிமுத்துவுடன் ரெட்டியார்பாளையம் மரியாள் நகரில் உள்ள மகள் வீட்டில் தங்கி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு கருணாகரனுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கருணாகரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் மாடிக்கு சென்ற கருணாகரன் அங்கு கிரில் கேட்டில் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம் சீத்தாராம் வீதியை சேர்ந்தவர் கருணாகரன். (வயது 69). இவர் விழுப்புரத்தில் நகை செய்யும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கருணாகரனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கருணாகரன் தனது மனைவி மாரிமுத்துவுடன் ரெட்டியார்பாளையம் மரியாள் நகரில் உள்ள மகள் வீட்டில் தங்கி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு கருணாகரனுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கருணாகரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் மாடிக்கு சென்ற கருணாகரன் அங்கு கிரில் கேட்டில் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.