செய்திகள்
மரணம்

மதுக்கரை அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

Published On 2020-02-13 10:41 GMT   |   Update On 2020-02-13 10:41 GMT
கோவை மதுக்கரை அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை:

கோவை மதுக்கரை மைல்கல் பகுதியை சேர்ந்தவர் பகவான். இவரது மனைவி சின்னம்மாள் (வயது 66). நேற்று கோவை வந்த இவர் வீடு திரும்ப அரசு டவுன் பஸ்சில் புறப்பட்டார்.

பஸ் மைல்கல் நிறுத்தத்தில் நிற்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சின்னம்மாள் பஸ்சை நிறுத்துமாறு கூறினார். பஸ்சை டிரைவர் நிறுத்த முயன்றார். பஸ் நிற்கும் முன்பே சின்னம்மாள் இறங்கினார். இதில் தவறி விழுந்த சின்னம்மாள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்.

இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News