செய்திகள்
கொள்ளை

தண்டராம்பட்டு அருகே விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை

Published On 2020-02-08 10:59 GMT   |   Update On 2020-02-08 10:59 GMT
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே விவசாயி வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த பெருந்துறைப்பட்டு மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சூசைராஜ் விவசாயி.

இவர்  விற்பனைக்கு வந்த 2 ஏக்கர் விவசாய நிலத்தை விலைக்கு வாங்க முடிவு செய்தார். அதற்காக தனது உறவினர்களிடம் கடனாக ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் பெற்றார்.

அதனையும்  10 பவுன் நகைகளையும் வீட்டில் வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சுரேஷ் தனது விவசாய நிலத்திற்கு குடும்பத்தினருடன் சென்றுவிட்டார்.

இதை நோட்டமிட்ட  மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த  நகை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர். மாலையில் வீடு திரும்பிய சுரேஷ் வீட்டில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதுபற்றி அவர் வாணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தினர். மேலும் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News