செய்திகள்
விஷம்

சுவாமிமலை அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை முயற்சி

Published On 2020-02-07 10:01 GMT   |   Update On 2020-02-07 10:01 GMT
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே கடன் தொல்லை காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாமிமலை:

சுவாமிமலை பேஷ்வா தெருவில் வசிப்பவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜோதிலட்சுமி (வயது 48). இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சுவாமிமலை பண்டகசாலை தெருவில் வசிக்கும் விஜயகுமார் (53) என்பவரிடம் ரூபாய் 80 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். கொடுத்த பணத்தை விஜயகுமார் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.

சம்பவத்தன்று விஜய குமார் ஜோதி லட்சுமியிடம் பணத்தை கேட்டு தகராறு செய்தார். இதனால் மனமுடைந்த ஜோதிலட்சுமி வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவரை உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இதுகுறித்து ஜோதிலட்சுமி சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News