செய்திகள்
ஆரல்வாய்மொழியில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் பலி
ஆரல்வாய்மொழியில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து வாலிபர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் பாரதிநகரைச் சேர்ந்தவர் மாயசுந்தர். இவரது மகன் சுரத்குமார், (வயது 19).
இவர், சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில், பூதப்பாண்டியில் இருந்து ஆரல்வாய்மொழி நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆரல்வாய்மொழி அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்தது.
நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதாமல் இருக்க சுரத்குமார், மோட்டார் சைக்கிளை திருப்பினார். இதில் நிலை தடுமாறி சுரத்குமார் கீழே விழுந்தார். அவருக்கு தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சுரத்குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூதப்பாண்டி அருகே இறச்சகுளம் பாரதிநகரைச் சேர்ந்தவர் மாயசுந்தர். இவரது மகன் சுரத்குமார், (வயது 19).
இவர், சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில், பூதப்பாண்டியில் இருந்து ஆரல்வாய்மொழி நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆரல்வாய்மொழி அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளின் குறுக்கே நாய் ஒன்று பாய்ந்தது.
நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதாமல் இருக்க சுரத்குமார், மோட்டார் சைக்கிளை திருப்பினார். இதில் நிலை தடுமாறி சுரத்குமார் கீழே விழுந்தார். அவருக்கு தலை மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி சுரத்குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.