செய்திகள்
இருசக்கர வாகனம் தீ வைப்பு

தொப்பூர் அருகே இருசக்கர வாகனத்தை தீயிட்டு எரித்த மர்ம நபர்

Published On 2020-02-05 16:46 GMT   |   Update On 2020-02-05 16:46 GMT
தொப்பூர் அருகே வீட்டின்முன்பு நின்ற இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்தி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்துள்ள பாகல்அள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் அஜித் (வயது 24). இவருக்கு சொந்தமாக இருசக்கர வாகனம் உள்ளது.

இந்த நிலையில் அஜீத் நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தை அவரது வீட்டின்முன்பு விட்டுவிட்டு வீட்டிற்கு தூங்கசென்று விட்டார். அதன் பின்னர் நேற்று காலை வெளியே வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் எரிந்த நிலையில் கருகிப்போய் நின்றது. 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அஜித் தொப்பூர் போலீஸ் நிலையத்தில் எனது இருசக்கர வாகனத்தை யாரோ மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்தி உள்ளனர் எனவும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு புகார் செய்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News