செய்திகள்
ஏஜிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் ரூ.25 கோடி பணம் பறிமுதல்
சென்னையில் ஏஜிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.25 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை கூறி உள்ளது.
சென்னை:
சென்னையில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், அந்த நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். 20க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின்போது கணக்கில் காட்டாப்படாத பணம் சுமார் ரூ.25 கோடி கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.