செய்திகள்
கிருஷ்ணகிரியில் வேன் டிரைவர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி காமராஜ் நகரைச் சேர்ந்த லட்சுமணன் மகன் மாரிமுத்து (வயது 35), வேன் டிரைவர்.
மாட்டுப் பொங்கலான நேற்று வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை அவர் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் காயம் இருந்தது. யாரோ அவரது தலையில் கல்லைப் போட்டு கொன்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவரது பெற்றோர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று வேன் டிரைவர் பிணத்தை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி காமராஜ் நகரைச் சேர்ந்த லட்சுமணன் மகன் மாரிமுத்து (வயது 35), வேன் டிரைவர்.
மாட்டுப் பொங்கலான நேற்று வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை அவர் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் காயம் இருந்தது. யாரோ அவரது தலையில் கல்லைப் போட்டு கொன்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அவரது பெற்றோர் கிருஷ்ணகிரி தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று வேன் டிரைவர் பிணத்தை கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.