செய்திகள்
எடப்பாடி பழனிசாமி- ஓ பன்னீர் செல்வம்

சேலம் அ.தி.மு.க. நிர்வாகி நீக்கம்

Published On 2020-01-13 08:29 GMT   |   Update On 2020-01-13 08:29 GMT
சேலம் புறநகர் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றிய துணைத் செயலாளர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர், பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அ.தி.மு.க. கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சேலம் புறநகர் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றிய துணைத் செயலாளர் பொன்னுசாமி, இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அவருடன் அ.தி.மு.க.வினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News