செய்திகள்
கொள்ளை

கொடுங்கையூரில் பெண்ணை ஆட்டோவில் கடத்தி நகை பறிப்பு

Published On 2020-01-06 08:45 GMT   |   Update On 2020-01-06 08:45 GMT
கொடுங்கையூரில் பெண்களே கும்பலாக ஆட்டோவில் வந்து நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராயபுரம்:

கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மனைவி பஷீரா பானு. நேற்று இரவு இவர் அருகில் உள்ள டிபன் கடைக்கு நடந்து சென்றார்.

அப்போது சாலை ஓரத்தில் நின்ற மூதாட்டி ஒருவர் பஷீரா பானுவிடம் ரோட்டை கடந்துவிடும்படி கேட்டார். இதையடுத்து மூதாட்டியை பஷீரா பானு அழைத்துச்சென்றார்.

அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ அருகே சென்றபோது மூதாட்டி திடீரென பஷீரா பானுவை வண்டிக்குள் தள்ளிவிட்டார். ஆட்டோவில் இருந்த 4 பெண்களும் பஷீரா பானுவை கத்திமுனையில் மிரட்டி வண்டிக்குள் ஏற்றினர். மூதாட்டியும் அதே ஆட்டோவில் ஏறிக்கொண்டார்.

எம்.கே.பி.நகர் அருகே ஆட்டோ சென்றபோது பஷீராபானு அணிந்திருந்த 15 பவுன் நகையை பறித்தனர்.

பின்னர் அவரை இருளான பகுதியில் இறக்கிவிட்டு ஆட்டோவில் இருந்த பெண்கள் தப்பி சென்றுவிட்டனர். ஆட்டோவை ஓட்டியதும் பெண் ஆவார்.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெண்களே கும்பலாக ஆட்டோவில் வந்து நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News