செய்திகள்
கோப்பு படம்

கொட்டாம்பட்டி அருகே 4 வழிச்சாலையை கடந்த விவசாயி வாகனம் மோதி பலி

Published On 2020-01-02 09:02 GMT   |   Update On 2020-01-02 09:02 GMT
கொட்டாம்பட்டி அருகே 4 வழிச்சாலையை கடக்க முயன்ற விவசாயி வாகனம் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:

கொட்டாம்பட்டி அருகே உள்ள பரமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வய 48) விவசாயி. இவர் பரம நாதபுரம் அருகே உள்ள அய்வந்தான் ஊருக்குச் செல்ல அங்குள்ள 4 வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத் திலேயே ரத்த வெள் ளத்தில் பலியானார்.

விபத்து குறித்து கொட் டாம்பட்டி போலீ சுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கண்ணனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கண்ணன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என்பதை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News