செய்திகள்
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு: திருவாரூரில் பெண்கள் கோலமிட்டு போராட்டம்
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திருவாரூரில் இன்று காலை வீடுகளின் முன்பு கோலமிட்ட பெண்கள் வேண்டாம் என்.ஆர்.சி., சி.ஏ.ஏ என்ற வாசகங்களை எழுதி தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர்:
குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை தெரிவிக்கும் வகையில் பெண்கள் தங்களது வீடுகளில் கோலம் வரைந்து அதில் வேண்டாம் குடியுரிமை சட்டம் என்கின்ற வாசகங்களை எழுதுகிறார்கள்.
இதுபோல கோலம் போடும் நபர்கள் மீது வழக்குத் தொடரும் நடவடிக்கைகளை போலீசார் ஒருபுறம் மேற்கொண்ட நிலையில் தமிழகம் முழுவதும் இந்த கோலம் போடும் போராட்டம் பரவி வருகிறது. அந்த வகையில், திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு நெய்விளக்கு தோப்பு பகுதியில் உள்ள வீடுகளில் இன்று காலை கோலமிட்ட பெண்கள் வேண்டாம் என்.ஆர்.சி., சி.ஏ.ஏ என்ற வாசகங்களை எழுதி தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கோலம் வரையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை தெரிவிக்கும் வகையில் பெண்கள் தங்களது வீடுகளில் கோலம் வரைந்து அதில் வேண்டாம் குடியுரிமை சட்டம் என்கின்ற வாசகங்களை எழுதுகிறார்கள்.
இதுபோல கோலம் போடும் நபர்கள் மீது வழக்குத் தொடரும் நடவடிக்கைகளை போலீசார் ஒருபுறம் மேற்கொண்ட நிலையில் தமிழகம் முழுவதும் இந்த கோலம் போடும் போராட்டம் பரவி வருகிறது. அந்த வகையில், திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு நெய்விளக்கு தோப்பு பகுதியில் உள்ள வீடுகளில் இன்று காலை கோலமிட்ட பெண்கள் வேண்டாம் என்.ஆர்.சி., சி.ஏ.ஏ என்ற வாசகங்களை எழுதி தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.
சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கோலம் வரையப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.