கம்பம் அருகே வாலிபரை குத்தி நகை-பணம் கொள்ளை
தேனி:
கம்பம் அருகே உள்ள ஏகலூத்து ரோடு இ.பி. ஆபீஸ் அருகே வசித்து வருபவர் நடராஜன் (வயது 49). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று நடராஜன் மகன் துரை நெப்போலியன் (24) டிராக்டரில் இ.பி. ஆபீஸ் அருகே வந்து கொண்டு இருந்தார். அப்போது அவரை வழி மறித்த விஜய் டிராக்டரில் இருந்து கீழே இறக்கி துரை நெப்போலியனை அரிவாளால் தாக்கினர். மேலும் விஜயின் ஆதரவாளர்களான ஜாக்கி என்ற சாய்குமார், அன்பு, சந்திரா, பழனியம்மாள், பாலு, முருகன், ஆகிய 7 பேரும் சேர்ந்து கத்தியால் சரமாரியாக குத்தி அவரிடம் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த துரை நெப்போலியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து அவரது தந்தை நடராஜ் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து 7 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.