செய்திகள்
மின்சார ரெயில்

பராமரிப்பு பணி - மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

Published On 2019-12-24 03:36 GMT   |   Update On 2019-12-24 03:36 GMT
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-ஆவடி இடையே இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று(செவ்வாய்க்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 10.08, 10.56 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று, 27, 28, 30-ந்தேதிகளில் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11.48 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இன்று, 27, 28, 30-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே இன்று, 27, 28, 30-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் திருமால்பூர்-கூடுவாஞ்சேரி இடையே இன்று, 27, 28, 30-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* செங்கல்பட்டு-கடற்கரை இடையே மதியம் 12.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே இன்று, 27, 28, 30-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News