செய்திகள்
பேரணியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் -மு.க.ஸ்டாலின்

Published On 2019-12-23 06:42 GMT   |   Update On 2019-12-23 06:42 GMT
குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறும் வரை திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை:

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் இன்று திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை அருகில் இருந்து தொடங்கிய பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவடைந்தது. அங்கு குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

பின்னர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்தது பேரணி இல்லை; போர் அணி என குறிப்பிட்டார்.

‘குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறும் வரை திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் போராட்டம் தொடரும். இன்று நடைபெற்ற திமுக பேரணி விளம்பரமடைய  துணை நின்ற அதிமுக மற்றும் பாதுகாப்பு தந்த காவல்துறைக்கு நன்றி’ என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
Tags:    

Similar News