செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2019-12-10 04:02 GMT   |   Update On 2019-12-10 04:02 GMT
மேட்டூர் அணையில் இருந்து நேற்று காவிரியில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று தண்ணீர் திறப்பு 4 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர்மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. நேற்று 5ஆயிரத்து 993 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று 5 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து நேற்று காவிரியில் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று தண்ணீர் திறப்பு 4 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.

கால்வாயில் வழக்கம்போல் 750 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.

Tags:    

Similar News