செய்திகள்
கோப்புப்படம்

தண்டையார்பேட்டையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேர் கைது

Published On 2019-11-27 07:09 GMT   |   Update On 2019-11-27 07:09 GMT
சென்னை தண்டையார்பேட்டையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தண்டையார்பேட்டை:

தண்டையார்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக வரும் பெண் ஒருவர் தினமும் மாணவர்களிடம் பேசுவதாக  போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தண்டையார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று ரகசியமாக கண்காணித்தார். அப்போது  பெண் ஒருவர் வாலிபருடன் வந்து மாணவர்களை அழைத்து பேசினார். அவர்களை போலீசார் மடக்கி விசாரித்ததில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் காசிமேடு பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற நொண்டி லட்சுமி, தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது.

இருவரும் கஞ்சா பொட்டலங்களை கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தனர். மேலும் லட்சுமி காசிமேடு பகுதியில் கஞ்சா மொத்த வியாபாரம் செய்தது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே காசிமேடு போலீஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக வழக்குகள் உள்ளது. இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தெராசபுரம் பகுதியில் கஞ்சா விற்ற ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நிக்கோலன், நரேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News