செய்திகள்
திருமங்கலம் அருகே திருமணமான 10 நாளில் புதுப்பெண் மாயம்
திருமங்கலம் அருகே திருமணமான 10 நாளில் மாயமான புதுப்பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருமங்கலம்:
திருமங்கலம் அருகேயுள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25), கூலித்தொழிலாளி. இவருக்கும், மோனிஷா (21) என்ற பெண்ணுக்கும் கடந்த 1-ந்தேதி திருப்பரங்குன்றம் கோவிலில் திருமணம் நடைபெற்றது. தனிக் குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் 11-ந் தேதி கடைக்குச் சென்று வாங்கி வருகிறேன் என்று வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த பிரகாஷ் மற்றும் அவரது உறவவினர்கள் மோனிஷாவை பல்வேறு இடங்களில் தேடினார்கள். பலன் இல்லை. எனவே திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மோனிஷாவை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
திருமங்கலம் அருகேயுள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25), கூலித்தொழிலாளி. இவருக்கும், மோனிஷா (21) என்ற பெண்ணுக்கும் கடந்த 1-ந்தேதி திருப்பரங்குன்றம் கோவிலில் திருமணம் நடைபெற்றது. தனிக் குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் 11-ந் தேதி கடைக்குச் சென்று வாங்கி வருகிறேன் என்று வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
அதிர்ச்சியடைந்த பிரகாஷ் மற்றும் அவரது உறவவினர்கள் மோனிஷாவை பல்வேறு இடங்களில் தேடினார்கள். பலன் இல்லை. எனவே திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மோனிஷாவை தீவிரமாக தேடி வருகிறார்கள்.