செய்திகள்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 31 ஆயிரம் கனஅடியாக சரிவு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 31 ஆயிரம் கனஅடி வீதம் வந்துகொண்டிருக்கிறது.
ஒகேனக்கல்:
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் 3 நாட்களுக்கு முன்பு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அதன்பிறகு நீர்வரத்து 33 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 31 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.
இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இன்று 82-வது நாளாக அருவிகளில் குளிக்கவும், இன்று 13-வது நாளாக பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் 3 நாட்களுக்கு முன்பு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அதன்பிறகு நீர்வரத்து 33 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 31 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது.
இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இன்று 82-வது நாளாக அருவிகளில் குளிக்கவும், இன்று 13-வது நாளாக பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.