செய்திகள்
ஜிகே வாசன்

டாக்டர்கள் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

Published On 2019-10-26 06:36 GMT   |   Update On 2019-10-26 06:36 GMT
தமிழக அரசு டாக்டர்கள் நியாயமான கோரிக்கைகளை கனிவோடு பரிசீலனை செய்து அவர்கள் குறைகளை நிறையாக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவர்கள் பல நியாயமான கோரிக்கைளை முன் வைத்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை கனிவோடு பரிசீலனை செய்து அவர்கள் குறைகளை நிறையாக்க வேண்டும்.

மருத்துவர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தி நம்பிக்கையோடு தங்கள் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News