செய்திகள்
நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை
நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பிற்பகல் முதல் இன்று அதிகாலை வரை பரவலாக மழை பெய்துள்ளது
நெல்லை:
நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக நேற்று பிற்பகல் முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சற்று அதிகமாக மழை பெய்துள்ளது. மழை காரணமாக பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை அணைக்கு வினாடிக்கு 159.95 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதனால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று 111.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 123.10 அடியாக இருந்தது. இன்று அந்த அணையும் 2 அடி உயர்ந்து 125 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 197 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து இன்று 48.80 அடியாக உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கொடுமுடியாறு-20, குண்டாறு-15, பாபநாசம்-12, களக்காடு -8.2,செங்கோட்டை-7, அடவிநயினார்-5, ராமநதி-4, நாங்குநேரி-2.5, தென்காசி-2.2., கடனாநதி-2, சங்கரன்கோவில்-1, சிவகிரி-1 .
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
வைப்பார்-9, விளாத்திகுளம்-3, கோவில்பட்டி-2, எட்டயபுரம்-1.
நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக நேற்று பிற்பகல் முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சற்று அதிகமாக மழை பெய்துள்ளது. மழை காரணமாக பாபநாசம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை அணைக்கு வினாடிக்கு 159.95 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதனால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று 111.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 123.10 அடியாக இருந்தது. இன்று அந்த அணையும் 2 அடி உயர்ந்து 125 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 197 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து இன்று 48.80 அடியாக உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கொடுமுடியாறு-20, குண்டாறு-15, பாபநாசம்-12, களக்காடு -8.2,செங்கோட்டை-7, அடவிநயினார்-5, ராமநதி-4, நாங்குநேரி-2.5, தென்காசி-2.2., கடனாநதி-2, சங்கரன்கோவில்-1, சிவகிரி-1 .
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
வைப்பார்-9, விளாத்திகுளம்-3, கோவில்பட்டி-2, எட்டயபுரம்-1.