செய்திகள்
ஸ்மார்ட் கார்டு

பெயர், முகவரி மாற்றம் செய்தவர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2019-10-19 07:59 GMT   |   Update On 2019-10-19 07:59 GMT
பெயர், முகவரி மாற்றம் செய்தவர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தென்திருப்பேரை:

ரே‌ஷன் கடைகளில் குடும்பதாரர்களுக்கு ரே‌ஷன் பொருள்கள் வாங்க ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கி வருகின்றனர். ஆனால் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறியவர்கள், பெயர் மாற்றம் செய்தவர்கள், முகவரி மாற்றம் செய்தவர்களின் ஸ்மார்ட் கார்டில் பழைய முகவரி தான் உள்ளது. அந்த கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்க வேண்டியுள்ளது.

அந்த கார்டு சில நேரங்களில் ரே‌ஷன் கடை மிஷினில் ஸ்கேன் ஆவதில்லை. அதற்கு பதிலாக ஆதார் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கி கொள்ளலாம் என்று கூறுகின்றனர். ஆதார் கார்டும், பிளாஸ்டிக் கார்டும் ஸ்கேன் ஆவதில்லை.

இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், ‘இது சம்பந்தமான புகார்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக முகவரி மாற்றம், பெயர் மாற்றம் செய்தவர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவில்லை. சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்மார்ட் கார்டில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் செய்தவர்களுக்கு புதிய கார்டு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதற்கான ஸ்மார்ட் கார்டு அச்சிடும் எந்திரம் உணவு வழங்கல் துறைக்கு வந்துள்ளது. ஆனால் அதன் நடைமுறைபடுத்துவதற்கான அறிவிப்பு வரவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம் அறிவிப்பு வந்ததும் புதிய கார்டுகள் வழங்குவோம்’ என கூறினர்.

எனவே தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு இதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News