செய்திகள்
கோப்பு படம்

வாகன சோதனையின்போது சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய 3 பேர் கைது

Published On 2019-10-17 09:49 GMT   |   Update On 2019-10-17 09:49 GMT
வெட்டூர்ணிமடம் பகுதியில் வாகன சோதனையின் போது வடசேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரை மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:

வடசேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தங்க ராஜா மற்றும் போலீசார் நேற்று வெட்டூர்ணிமடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர் மற்றும் லாரியில் இருந்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டரை ஆபாசமாக பேசினர். மேலும் கொலைமிரட்டலும் விடுத்து, அரசு பணியை செய்யவிடாமல் தடுத்து, அங்கிருந்து தப்பிச்செல்லவும் முயன்றனர்.

இதையடுத்து அங்கு இருந்த போலீசார் அவர்களை மடக்கிப்பிடித்தனர். இது குறித்து வடசேரி போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் தங்க ராஜா புகார் செய்தார். லாரியை போலீஸ் நிலையம் கொண்டு சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் திருச்சியில் இருந்து எந்தவித அனுமதியும் இன்றி நாகர்கோவிலுக்கு மணல் கடத்தி வருவது தெரிய வந்தது. மேலும் லாரியை ஓட்டிவந்த ராஜ்குமார் (வயது 45), ஸ்டாலின்ஜோஸ் (31), தாவீதுராஜா (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News