செய்திகள்
மின் தடை

அனுப்பானடி-தெப்பக்குளத்தில் நாளை மின் தடை

Published On 2019-10-16 16:23 GMT   |   Update On 2019-10-16 16:23 GMT
மதுரை அனுப்பானடி மற்றும் தெப்பக்குளம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மதுரை:

மதுரை அனுப்பானடி மற்றும் தெப்பக்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (17-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ராஜீவ் நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் மருத்துவமனை, சினி பிரியா தியேட்டர், ஆவின் பால்பண்ணை, ஐராவதநல்லூர், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், வேலன் தெரு, கிருபானந்த வாரியார் நகர், சுந்தர்ராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார்நகர், தாய்நகர், கங்காநகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர் பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.

தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம் ரோடு, அனுப்பானடி கிழக்கு, மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங்கம்நகர், வடிவேல்நகர், மைனர் ஜெயில் பகுதிகள், அழகர்நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி.டி. சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர். ரோடு, கொண்டிதொழு, சீனிவாசப் பெருமாள் கோவில் தெரு, சின்னகண்மாய் பால ரெங்கபுரம், சண்முகநகர், நவரத்தினபுரம், பிளசர் ரோடு, இந்திராநகர்,

பழைய குயவர் பாளையம் ரோடு, லெட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான் பாளையம் 1 முதல் 2 வரை பச்சரிசிக்காரத் தோப்பு முழுவதும், மைனா தெப்பம் 1 முதல் 3 வரை, கிருஷ்ணாபுரம் பகுதி முழுவதும், ராஜீவ் காந்தி தெரு, மேல அனுப்பானடி கிழக்கு பகுதி, தமிழன் தெரு, என்.எம்.ஆர். புரம், ஏ.ஏ. ரோடு, பி.பி.ரோடு, டி.டி. ரோடு, மீனாட்சிபுரம் அவென்யூ, திருமகள் நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

மேற்கண்ட தகவலை தெற்கு செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News