செய்திகள்
கொள்ளை

திருப்பூர் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கி பணம் பறித்த 3 பேருக்கு வலைவீச்சு

Published On 2019-10-16 09:42 GMT   |   Update On 2019-10-16 09:42 GMT
திருப்பூர் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கி பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் திருமுருகன் பூண்டி அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது, அங்கு விற்பனையாளராக சிவக்குமார் வயது(43) என்பவர் பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று மாலை 3 பேர் மது குடிக்க வந்துள்ளனர். அவர்கள் திடீரென டாஸ்மாக் கடைக்குள் புகுந்து விற்பனையாளர் சிவக்குமாரை தாக்கி பணம் கேட்டுள்ளனர்.

அவர் கொடுக்க மறுத்துவிட்டார் உடனே 3 பேரும் சிவகுமாரை அடித்து கீழே தள்ளி விட்டு கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். அதற்குள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். அந்த நபர்கள் டாஸ்மாக் கடையில் இருந்த ரூ.20 ஆயிரத்து 920யை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விற்பனையாளர் சிவகுமார் 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்தார் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News