செய்திகள்
ஒரத்தநாடு அருகே குடிபோதையில் 4 பேருக்கு கத்திக்குத்து- வாலிபர் கைது
ஒரத்தநாடு அருகே குடிபோதையில் 4 பேரை கத்தியால் குத்தியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே புதூர் வடக்குதெருவை சேர்ந்த விஜயகுமார் மகன் சிகப்பிரகாசம் (வயது 23). இவர் சம்பவத்தன்று தனது நண்பர்கள் சுதன் (25), மகாகவி (24), விஜயராகவன் (26) ஆகியோருடன் அமர்ந்து மது குடித்துள்ளார்.
அவர்களுக்கு அருகில் ஒரத்தநாடு யானைக்கார தெருவை ராகவன் (35) அவரது நண்பர்கள் தினேஷ் (31), கணேஷ் (28) ஆகியோர் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராகவன் கத்தியால் சிகப்பிரகாசத்தை குத்தியுள்ளார். இதனை தடுக்க முயன்ற சுதன், மகாகவி, விஜயராகவன் ஆகியோரையும் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த 4 பேரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் சுமித்ரா வழக்குப்பதிவு செய்து ராகவனை கைது செய்தார்.
ஒரத்தநாடு அருகே புதூர் வடக்குதெருவை சேர்ந்த விஜயகுமார் மகன் சிகப்பிரகாசம் (வயது 23). இவர் சம்பவத்தன்று தனது நண்பர்கள் சுதன் (25), மகாகவி (24), விஜயராகவன் (26) ஆகியோருடன் அமர்ந்து மது குடித்துள்ளார்.
அவர்களுக்கு அருகில் ஒரத்தநாடு யானைக்கார தெருவை ராகவன் (35) அவரது நண்பர்கள் தினேஷ் (31), கணேஷ் (28) ஆகியோர் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராகவன் கத்தியால் சிகப்பிரகாசத்தை குத்தியுள்ளார். இதனை தடுக்க முயன்ற சுதன், மகாகவி, விஜயராகவன் ஆகியோரையும் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த 4 பேரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் சுமித்ரா வழக்குப்பதிவு செய்து ராகவனை கைது செய்தார்.