செய்திகள் (Tamil News)
கைது

ஓசூரில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2019-10-01 13:34 GMT   |   Update On 2019-10-01 13:34 GMT
ஓசூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-ராயக்கோட்டை ரோடு ஜங்ஷன் பண்டாஞ்சநேயர் கோவில் அருகே தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பதாக ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் பட்டு மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பார்த்தசாரதி (வயது 50) என்பவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். 

அவரிடமிருந்து கேரள மாநில லாட்டரி சீட்டுகள் 48, ரொக்கப்பணம் ரூ.1,200 மற்றும் ஒரு மொபெட் வண்டியை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாகி விட்ட தேவராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News