தேனியில் தகராறு செய்ததை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்
தேனி:
தேனி வள்ளிநகர் கம்போஸ்ட் ஓடை தெருவை சேர்ந்தவர் அய்யனார் (வயது28). இவர் அதே பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது காசி மற்றும் அவரது உறவினர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக தகாத வார்த்தையால் பேசி தகராறு செய்து கொண்டிருந்தனர்.
இதனை அய்யனார் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை தாக்கியுள்ளனர்.
இது குறித்து தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போடி தேரடித்தெருவை சேர்ந்தவர் நாகையா (30). இவரது எதிர் வீட்டில் குடியிருக்கும் கவுதம் என்பவருக்கும் இவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று கவுதம், நாகையாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து போடி நகர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதமை கைது செய்தனர்.