செய்திகள்
மின்சாரம் நிறுத்தம்

மூலப்பாளையம், முள்ளாம்பரப்பு ஈரோடு புறநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

Published On 2019-09-20 11:18 GMT   |   Update On 2019-09-20 11:18 GMT
மூலப்பாளையம், முள்ளாம்பரப்பு ஈரோடு புறநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

கஸ்பாபேட்டை, முள்ளாம் பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டு வலசு, பொட்டி நாய்க்கன் வலசு, வீரப்பம் பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன் பாளையம், செல்லப்பம் பாளையம், கோவிந்த நாய்க்கன் பாளையம்,

நஞ்சை ஊத்துக்குளி, செங்கரை பாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆணைக்கல் பாளையம், ஈ.பி. நகர், கே.ஏ.எஸ். நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிப் பாளையம், சடையம் பாளையம், திருப்பதி கார்டன், முத்து கவுண்டன் பாளையம், கருந்தேவன் பாளையம், சாவடி பாளையம் புதூர், கிளயம் பட்டி, ரகுபதி நாய்க்கன் பாளையம், காகத்தான் வலசு.

இந்த தகவலை ஈரோடு தெற்கு மின் வாரிய செயற் பொறியாளர் சா.முத்துவேல் தெரிவித்தார்.

Tags:    

Similar News