செய்திகள்
கைது

மதுரையில் நினைவு அஞ்சலி பேனர் வைத்த வாலிபர் கைது

Published On 2019-09-20 04:41 GMT   |   Update On 2019-09-20 04:41 GMT
மதுரை கோரிப்பாளையத்தில் அனுமதியின்றி நினைவு அஞ்சலி பேனர் வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:

மதுரை கோரிப்பாளையத்தில் அனுமதியின்றி நினைவு அஞ்சலி பேனர் வைக்கப்பட்டு இருப்பதாக தல்லாகுளம் போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அங்கு கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் ஆருயிர் நண்பன் ரவிக்கு முதலாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி என்ற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கோரிப்பாளையத்தில் நினைவு அஞ்சலி பேனர் வைத்ததாக கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News