செய்திகள்
தீக்குளித்து தற்கொலை

வந்தவாசி அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

Published On 2019-09-19 11:29 GMT   |   Update On 2019-09-19 11:29 GMT
வந்தவாசி அடுத்த கோதண்டபுரம் கிராமத்தில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தவாசி:

வந்தவாசி அடுத்த கோதண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகள் சுமித்ரா (21). வந்தவாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்த இவர் கடந்த 6 மாதங்களாக உடல்நல குறைவு காரணமாக மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். இதனால் கல்லூரி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அதிகாலை அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென சுமித்ரா மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு அறையில் தீ வைத்தார். சுமித்ராவின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர்கள் கண்விழித்து பார்த்தபோது சம்பவ இடத்திலேயே தீயில் கருகி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த வடவணக்கம்பாடி போலீசார் மாணவியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News