செய்திகள் (Tamil News)
விபத்து காயம்

திருப்பனந்தாள் அருகே மரத்தின் மீது கார் மோதி 2 பேர் படுகாயம்

Published On 2019-09-13 08:54 GMT   |   Update On 2019-09-13 08:54 GMT
திருப்பனந்தாள் அருகே மரத்தின் மீது கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்:

திருச்சி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுமன் (வயது 40). இவர் சீர்காழியில் உள்ள தமது நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு காரில் ஊர் திரும்பினார்.

நேற்று மாலை திருக்கோடிக் காவல் சாலை திருப்பத்தில் வந்தபோது குறுக்கே நாய் வந்ததால் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் நிலை தடுமாறிய கார் அப்பகுதியில் இருந்த மரத்தின் மீது மோதி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் சுமன், அவரது தாயார் உமா ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு துகிலி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் உதவியுடன் கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News