செய்திகள்
விபத்து

மோட்டார் சைக்கிள் விபத்தில் மீன் பண்ணை உரிமையாளர் பலி

Published On 2019-09-10 10:02 GMT   |   Update On 2019-09-10 10:02 GMT
திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மீன் பண்ணை உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:

தஞ்சை மாவட்டம் திருவையாறு பங்களாத்தெரு சாலையை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 65). மீன் பண்ணை உரிமையாளர்.

இவர் கடந்த 8-ந் தேதி மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் அருகே உள்ள சோமேஸ்வரம் சென்று விட்டு காருகுடி ரோட்டில் வந்துள்ளார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நாகராஜன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி நாகராஜனின் மகன் குமரேசன் திருவையாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது மோதிய மோட்டார் சைக்கிளில் வந்த நபரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் திருவையாறில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News