செய்திகள்
தற்கொலை

ஒரத்தநாடு அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2019-09-10 08:24 GMT   |   Update On 2019-09-10 08:24 GMT
ஒரத்தநாடு அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கக்கரையே சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 45). தொழிலாளி. இவர் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர் பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

இதில் மனமுடைந்த அவர் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றிய புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News