செய்திகள்
கொள்ளை

ராஜபாளையத்தில் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் கொள்ளை

Published On 2019-09-10 06:43 GMT   |   Update On 2019-09-10 06:43 GMT
ராஜபாளையத்தில் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பண்டிட் சுப்பாராஜா தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45), நெல் வியாபாரி.

இவரது தாயார் நெல்லை மாவட்டம், சிவகிரியில் வசித்து வந்தார். அங்கு அவர் இறந்து விட்டதால் முருகன் குடும்பத்தினருடன் சென்றார். இதனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது.

5 நாட்களுக்கு பின்னர் முருகன் மற்றும் குடும்பத்தினர் நேற்று வீடு திரும்பினர். வீட்டுக்குள் சென்ற அவர்கள், அங்கு பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து இருப்பது தெரியவர, ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் பீரோவில் இருந்த 30 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பதாக முருகன் தெரிவித்தார்.

கொள்ளை நடந்த வீட்டில் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டன.
Tags:    

Similar News