செய்திகள்
கொள்ளை

பொன்னேரியில் தொடர் வழிப்பறியால் பொதுமக்கள் அச்சம்

Published On 2019-09-07 06:37 GMT   |   Update On 2019-09-07 06:37 GMT
பொன்னேரியில் தொடர் வழிப்பறியால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பொன்னேரி:

பொன்னேரி தச்சூர் சாலை மாதவரம் பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தனியாக செல்பவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன், பணம்- செயினை பறிக்கிறார்கள். பணம் இல்லை என்றால் தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

இரவு நேரத்தில் கம்பெனியில் வேலை முடித்து வரும் நபர்களை மிரட்டி பணம் பறிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் வெளியே செல்ல பொது மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் இதுகுறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News