செய்திகள்
கொள்ளை

நெற்குன்றத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கெள்ளை

Published On 2019-09-07 06:21 GMT   |   Update On 2019-09-07 06:21 GMT
நெற்குன்றத்தில் வெளியூர் சென்றிருந்தவரின் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

நெற்குன்றம் பால்வாடி 1வது தெருவைச் சேர்ந்தவர் சசிகலா. இவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அறந்தாங்கி சென்றார். நேற்று சசிகலா வீடு திரும்பிய போது கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்து இருந்த 5பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. 

இதுகுறித்து சசிகலா கோயம்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News