செய்திகள்
களக்காடு அருகே விவசாயி தற்கொலை- போலீசார் விசாரணை
களக்காடு அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள பத்மநேரி மருதப்பர் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி வானுமாமலை (வயது 74). இவருக்கு வயிற்று வலி இருந்து வந்தது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த வானுமாமலை விஷம் குடித்தார்.
இதனை தொடர்ந்து அவரை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.
இது குறித்து அவரது மனைவி இசக்கியம்மாள் (60) களக்காடு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.