செய்திகள்
தற்கொலை

பெயிண்டிங் காண்டிராக்டர் தற்கொலை

Published On 2019-08-22 10:07 GMT   |   Update On 2019-08-22 10:07 GMT
கோவை அருகே தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பெயிண்டிங் காண்டிராக்டர் தற்கொலை செய்து கொண்டார்.

கோவை:

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 26). பெயிண்டிங் காண்டிராக்டர். இவரது மனைவி செல்வராணி இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுரேஷ்குமாருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். 

சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சுரேஷ்குமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News