செய்திகள்
விபத்து

ஊத்துக்கோட்டை அருகே கார் மோதி பூ வியாபாரி பலி

Published On 2019-08-17 06:41 GMT   |   Update On 2019-08-17 06:41 GMT
ஊத்துக்கோட்டை அருகே கார் மோதி பூ வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரம்பூர் பாஞ்சாலிநகரை சேர்ந்தவர் முருகன் (வயது 57) பூ வியாபாரி.

இவர் நேற்று மாலை சூளை மேனியில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டார். பின்னர் வீட்டுக்கு புறப்பட்டார்.

சூளைமேனி ஊராட்சி மன்றம் அலுவலகம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் காரை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் அனுமந்தன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். தப்பி ஓடிய கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

விபத்தில் பலியான முருகனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

Tags:    

Similar News